அபிவிருத்தி திட்டங்களை விரைவுப்படுத்த நடவடிக்கை

மாத்தளை மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகள், கொரோனா தொற்றால் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளதுடன், குறித்த அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நிறைவு செய்ய அனைத்து அதிகாரிகளும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

அதன்படி, மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்ட அபிவிருத்தியின் தேர்ச்சி, மாவட்டம் மற்றும் மாகாண நிதியத்தின் கீழ் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்தல், தடுப்பூசி நடவடிக் மற்றும் கொரோனா ஒழிப்பு செயற்பாடு உள்ளிட்டவை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *