நோர்வே தமிழர் விருது விழாவில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த காணொளிப்பாடலுக்கான விருது ஈழத் தமிழர் ஒருவருக்குக் கிடைத்துள்ளது.
தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் திரு.இமான் அவர்களினால், இலங்கையைச் சேர்ந்த பாடகர் கோகுலன் சாந்தனுக்கு இவ் விருது வழங்கிவைக்கப்பட்டது.
இக் காணொளிப்பாடலுக்கான, வரிகள் – தேசக்கவிஞர் வேலணையூர் சுரேஸ், இசை – இலங்கையைச் சேர்ந்த இசையமைப்பாளர் இசைப்பிரியன், ஒளிப்பதிவு – ‘Ak kamal , நடன அமைப்பு – மதி கிறிஸ்ரியன், படத்தொகுப்பு – As பிரசாத், தயாரிப்பு, முகாமை உதவி இயக்கம் – சுவீகரன் Ask, கலை, இயக்கம் – பிரதீப், பாடல் மற்றும் இயக்கம் – கோகுலன் சாந்தன், தாயாரிப்பாளர் – பிரபாகரன் சாந்தலிங்கம், கனடா மற்றும் உதயன் நடா ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

