கொழும்பில் வீதிக்கு இறங்கி வாகனத்திற்கு தீ வைத்த பொதுமக்கள்

குளியாப்பிட்டிய, கனதுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததினை தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலை நிலவியுள்ளது.

குளியாப்பிட்டிய – கனதுல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் இன்றைய தினம் டிபென்டர் வாகனமொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் டிபென்டரின் சாரதி குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து டிபென்டர் வாகனத்தை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயன்ற போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன்,பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *