
எல்லை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 6 பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் கோடியாக்கரை அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 பேரும் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

