அரசியல் வாதிகளை சந்திக்க மாட்டேன்: மல்வத்து பீடாதிபதி அறிவிப்பு

கொழும்பு, மே 2:

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை தீரும் வரை, அரசியல்வாதிகளை சந்திப்பதில்லை என மல்வத்து பௌத்த மகா பீடத்தின் மகா நாயகர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு வழங்காமை காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நாட்டின் நெருக்கடி நிலைமை தீர்க்கப்படும் வரையில் அரசியல்வாதிகள் எவரையும் சந்திப்பதில்லை என அவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *