
எதிர்வரும் 07 ஆம் திகதி அத்தியாவசியமற்ற பொது சேவைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு வருகை தருவதனை தவிர்த்துக்கொள்ளமாறு சுகாதார தொழிற்சங்க சம்மேளன ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் அறிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 06 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 07 ஆம் திகதி வைத்தியர்கள் தவிர்ந்த சுகாதார சேவையின் அனைத்து பணியாளர்களும் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

