நுவரெலியாவிலும் ‘கோட்டா கோ கம’ கிளை!

நுவரெலியாவில் வசிக்கும் இளைஞர்கள் “கோட்டா கோ கம” கிளை ஒன்றை நிறுவியுள்ளனர்.

நுவரெலியா பிரதான மத்திய சந்தைக்கு முன்பாக இந்த கிளையை அமைத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி, கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர், யுவதிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இப் போராட்டத்திற்கு ஆதரவாக, நாட்டின் பல இடங்களில் “கோட்டா கோ கம” கிளைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நுவரெலியாவிலும் “கோட்டா கோ கம” கிளையை நிறுவி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *