மக்கள் தெருவில் இறங்கிய பின்னர்தான் ஆளுந்தரப்பு தமது தவறுகளை உணர்ந்தது- ஸ்ரீநேசன்.

மக்கள் தெருவில் இறங்கிய பின்னர்தான் ஆளுந்தரப்பு தமது தவறுகளை ஏற்றுக்கொண்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஞானமுத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,

1-செல்வந்தர்களின் வரிகளை விலக்கியமை-இதனால் அரசாங்கத்திற்கு 60,000 கோடி ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டது.

2-சர்வதேச நாணய நிதியத்திடம்(IMF) நேரகாலத்துடன் கடன்களைப் பெற்றிருந்தால் முன்கூட்டியே பொருளாதார நெருக்கடியைக் குறைத்திருக்க முடியும்.

3-இரசாயன வளமாக்கியின் இறக்குமதியைத் தடை செய்தமையால் பயிர் விளைச்சல் 30-70 வீதம் வரை நட்டம் ஏற்பட்டது.

இதனால் அரிசியின் விலை அதிகரித்துள்ளது.வெளிநாடுகளில் இரசாயனம் கலந்த அரிசியை இறக்குமதி செய்யவேண்டி ஏற்பட்து.

இதனால் பல மில்லியன் டொலர்களை இலங்கை இழந்துள்ளது.

4-சீனி இறக்குமதியின் போது அரசுக்கு சேரவேண்டிய வரியினை ஒரு கிலோவுக்கானதை 50 ரூபாவில் இருந்து 25 சதங்களாகக் குறைத்தமையால் 1600 கோடி ரூபாய்கள் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *