அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகம்பை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கஜமுத்துக்கனை விற்பனை செய்ய முற்பட்ட ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று இரவு (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நேற்று இரவு அறுகம்பை டொப் ரென் வீதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வரப்பட்ட போது குறித்த பகுதியை சுற்றி வளைத்த விசேட அதிரடிப்படையின் சூட்சுமமான முறையில் சந்தேகநபருடன் உரையாடி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து யானை கஜமுத்துக்கள் (07) சிற்பி முத்து (06 ) என்பன மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
