
பாதுகாப்பு காரணங்களுக்காக பொல்துவ சுற்றுவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் வரையான வீதி நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளது.
இதனால் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடவுச்சீட்டு சேவைகளுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு விஜயம் செய்த குழுவினர் பத்தரமுல்லையில் இருந்து வீதியை மறித்து சேவைகளை இடைநிறுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அவசர கணினி பராமரிப்பு காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உட்பட அனைத்து கிளை அலுவலகங்களிலும் இன்று ஒரு நாள் மற்றும் சாதாரண சேவை கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.