
கொழும்பு, மே 05
பத்தரமுல்லை முதல் தலவத்துகொடை வரையான 174 பஸ் பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.