‘அரசாங்கத்தை அகற்றுவோம், ஆட்சியை கவிழ்ப்போம்’ என்ற தொனிபொருளில் பாரிய ஆர்ப்பாட்டம்!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

‘அரசாங்கத்தை அகற்றுவோம், ஆட்சியை கவிழ்ப்போம்’ என்ற தொனிப்பொருளில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 12 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளது.

திருடப்பட்ட பணத்தை மீட்பது, நிறுவனங்களால் செலுத்தப்படாத வரிகளை மீளப் பெறுதல், கடந்த காலங்களில் இடம்பெற்ற காணாமல் போனோர் மற்றும் கொலைகள் தொடர்பில் மீள் விசாரணை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், இலவசக் கல்வி, இலவச சுகாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாட்டில் உள்ள முக்கியமான அரசியல் மையத்தை நோக்கி இந்த போராட்டம் நகரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *