நாடாளுமன்ற வாக்கெடுப்பு அமர்வு ஆரம்பம்!

இந்த மாத்தின் இரண்டாவது நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ராஜினாமா செய்ததை அடுத்து பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு பலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்சவை நியமிக்க அரசாங்க கட்சி குழு கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நாடாளுமன்ற வாக்கெடுப்பு அமர்வு நேரலையில் ஒளிபரப்பாகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *