இரகசிய வாக்குச்சீட்டை தூக்கி காண்பித்த சஜித்

கொழும்பு, மே 05

பாராளுமன்றத்தில் தற்​போது மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்கெடுப்பில், உறுப்பினர்கள் வாக்களித்துக்கொண்டிருக்கின்றனர்.

இதில், வாக்களித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வாக்களித்ததன் பின்னர், வாக்குச்சீட்டை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடன் காண்பித்து, “ இரகசியம் இல்லை” என்றார்.

அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சஜித்தை பார்த்து கையை அசைத்து காண்பித்துள்ளார்.

அதேபோல, எதிரணியின் பக்கமாக நின்றிருந்தவாறு வாக்குச்சீட்டை தூக்கி காண்பித்து, “எந்த இரகசியமும் இல்லை” என குறிப்பிட்டது தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *