
கொழும்பு, மே 05
தேவையான எரிபொருள் கிடைக்காததன் காரணமாக நாளை முன்னெடுக்கவுள்ள ஹர்த்தால் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, நாளை நள்ளிரவு தொடக்கம் தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.