வவுனியாவிலும் முழு கடையடைப்பு நடத்த ஏற்பாடு!

இலங்கை முழுவதும் நடத்தப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு நடத்தவுள்ளதாக ஆசிரியர் சேவா சங்கத்தின் தலைவர் ம. ஜெகரீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாளைய தினம் நாடுபூராகவும் பூரண ஹர்த்தலை அனுஸ்டிப்பதற்கு நாட்டில் உள்ள அனைத்து அரச அரச சார்பற்ற தனியார் தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளன.

நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் தங்களது வாழ்வை கொண்டு நடத்த கஸ்டப்படும் நிலையில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சனைக்கு திர்வை காண்பதை விடுத்து இந்த பிரச்சனையை மேலும் விரிவடையச்செய்து மக்களை துன்புறுத்தக்கூடிய நிலையை தோற்றுவித்துள்ளது. எனவே இதனை பொறுத்துக்கொள்ள முடியாது.“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *