யாழில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள டோக்கன்!

யாழ். சிறுப்பிட்டி நகரில் இன்றைய தினம் டோக்கன் அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, விவசாய சம்மேளனத்தில் அனுமதி பெற்றவர்களுக்கு (டோக்கன்) முன்னுரிமை அடிப்படையில் மண்ணெண்ணெய் சிறுப்பிட்டி கிழக்கு, சிறுப்பிட்டி மேற்கு, புத்தூர் கிழக்கு, புத்தூர் மேற்கு, அச்செழு ஆகிய கிராமங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன .

குறித்த இவ்விடத்தின் எரிபொருள் நிலையத்தில் மக்கள் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக கேன்களுடன் வரிசையில் நிற்பதை அவதானிக்க கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *