பிரதி சபாநாயகர் தெரிவில் அரங்கேற்றப்படும் கூத்து மிகத்தெளிவாக இருக்கிறது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒவ்வொரு உறுப்பினரிடமும் சென்று சியம்பலாப்பிட்டியவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சியம்பலாப்பிட்டியவுக்கு ஆதரவளிக்கிறது.
பொதுஜன முன்னணியின் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தாமும் சியம்பலாப்பிட்டியவுக்கு ஆதரவு என சொல்கின்றார்.
இன்று இலங்கைக்காக இருப்பது 65 உறுப்பினர்களே.
148 உறுப்பினர்கள் ராஜபக்சவினருக்காகவே இருக்கின்றனர்.அவர்கள் ராஜபகசவினரை பாதுகாக்கவே உள்ளனர்.
இன்று ஒரு விடயத்தை சொல்ல வேண்டும் நாங்கள் எப்படியான ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தாலும் இங்கிருக்கும் கூத்தாடிகள்,திருடர்கள்,பொய்யர்கள் அதற்கு ஆதரவு தர மாட்டர்கள்.