சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

கொழும்பு, மே 05

2021 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள், ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இம்முறை 4 இலட்சத்து 7129 பரீட்சாத்திகள் பாடசாலை மூலமும் , ஒரு இலட்சத்து 1367 தனியார் பரீட்சாத்திகளும் சாதாரண தர பரீட்சைக்கு பாடசாலை தோற்றவுள்ளனர்.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் 3841 பரீட்சை நிலையங்களும், 542 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

Leave a Reply