உக்ரைன், ரஷியா போர் இவ்வளவு நாள் நீடிக்கும் என நினைக்கவில்லை: பெலாரஸ் அதிபர்

மின்ஸ்க்,மே 05

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடங்கியது. போர் வியாழக்கிழமை 71-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர்.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. அதேவேளை, உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இவ்வளவு நாள் நீடிக்கும் என நினைக்கவில்லை என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷியா போர் குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அலெக்சாண்டர் கூறியதாவது,

உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இவ்வளது நாட்கள் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. இந்த போரை நிறுத்த நான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன். எந்த வித போரையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உக்ரைன் ரஷியா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது’ என்றார்.

ரஷியா – உக்ரைனுக்கு ஆகிய நாடுகளுடன் பெலாரஸ் எல்லையை பகிர்கிறது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே பெலாரஸ் எடுத்துவருகிறது. பெரலாரஸ் அதிபர் அலெக்சாண்டரும் ரஷிய அதிபர் புதினும் நெருங்கிய கூட்டாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, சமீபத்தில் பெலாரஸ் மேற்கொண்ட ராணுவ பயற்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அதிபர் அலெக்சாண்டர், நாங்கள் யாரையும் அச்சுறுத்தவில்லை. யாரையும் அச்சுறுத்தப்போவதில்லை. யாரையும் அச்சுறுத்தமாட்டோம். அதேவேளை, நாங்கள் அச்சுறுத்தப்படக்கூடாது. எங்களை எதிர்ப்பது யார் என்று எங்களுக்கு தெரியும். மோதலை உருவாக்கி மேற்கத்திய நாட்டில் போரை உருவாக்குவது பெலாரசின் திட்டமில்ல. ஆகையால், மேற்கத்திய நாடுகள் நிம்மதியாக உறங்கலாம்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *