கல்வியங்காடு சந்திரசேகரப் பிள்ளையார் கோயில் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்தக் கைது சம்பவம் பற்றி மேலும் அறியவருவதாவது,
சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் பகுதியில் வீடு ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை கைக் கணனி (ரப்) ஒன்றும் இரு கைபேசிகளும் களவாடப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் நேற்று முன்தினம் புதன்கிழமை சந்தேகநபரை கைது செய்தனர்.
இவரை இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தினர்.
அவர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, எதிர்வரும் 10ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.