நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு

நாடளாவிய ரீதியில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கவுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகமாறு வலியுறுத்தி நாளை வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளைய ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கத்துக்கு நான்கு நாட்கள் கால அவகாசம் வழங்குவதாகவும் அதன் பின்னரும் அரசாங்கம் பதவி விலகவில்லையெனில் 11ஆம் திகதி முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், புகையிரத சங்கங்கள் உள்ளிட்ட பல சங்கங்கள் இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கங்களும் தமது ஆதரவை வழங்குவதற்கு முன்வந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *