சஜித்தை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கும் விமல்!

பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றையதினம் விசேட ஊடக சந்திப்பை கொழும்பில் நடத்தியிருந்தனர்.

குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவம்ச,

இன்று பாராளுமன்றில் பிரதான எதிர் கட்சியாக அங்கம் வகிக்கும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இன்று மற்றைய எதிர் கட்சியினரின் ஆதரவை பெற்று கொள்ள முடியாமல் போனது என்றும் சஜித் பிரேமதாச அவர்கள் உண்மையிலேயே எதிர் கட்சி தலைவர் என்றால் எதிர் கட்சியினர் ஆதரவை பெற்றுக்க வேண்டும்.

ஏன் இரு குழுக்களாக பிரிய வேண்டும் எதிர்கட்சி என்ற ரீதியில் இன்று அவர்கள் யாரிற்கு சார்பாக உள்ளனர் என தெரிந்தது என்றார்.

அத்துடன் குறைந்தபட்சம் சஜித் பிரேமதாச எதிர் கட்சியினர் என்ற ரீதியில் அனைவரிடம் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும் தீடீரென ஒருவரை கூறும் போது கட்சியினுள் கருத்து வேறுபாடு வரும்.

மற்றும் எதிர்க்கட்சி பிரியும் போது அரசாங்கத்திற்கு சார்பாகவே அமையும். முதல் முறையாக எதிர் கட்சி இரண்டாக பிரிய வழிவகுத்தவர் சஜித் பிரமதாச அவர்கள் மட்டுமே எனவும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்தா விமல் வீரவம்ச சஜித் பிரமதாச அவர்கள் நாடகம் போடுவது ராஜபக்ஷ அவர்களின் கை ஆட்டலுக்கே இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் சஜித் பிரமதாச அவர்களை வாதத்திற்கு அழைக்கிறேன் ஊடக முன்னிலையில் வேண்டுமென்றால் சிரச அலைவரிசையில் இவ் விவாதத்தை மேற்கொள்ள அழைக்கிறேன் என அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *