
கொழும்பு,மே 05
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள போதிலும், அரசாங்கம் மீளமைப்புக்கான உரிய திட்டத்தை முன்வைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.