அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு வழங்குகிறது பங்களாதேஷ்

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 2.3 மில்லியன் அமெ. டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை வழங்க பங்களாதேஷ் முன்வந்துள்ளது.

இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் (830 மில்லியன் ரூபா) பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்குவதை பங்களாதேஷ் உறுதி செய்துள்ளது.

சுமார் 56 வகையான அத்தியாவசிய மருந்துகள் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *