மாவனெல்லையில் புத்தர் சிலை உடைப்பு – 3 வருடங்களின் பின்னர் சந்தேகநபர்கள் விடுதலை

மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 சந்தேகநபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேலும் 7 பேரை பிணையில் விடுவிக்கவும் மாவனெல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மாவனல்லை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, விடுவிக்கப்படும் 14 சந்தேகநபர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றில் அறியப்படுத்தியுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் மூன்று ஆண்டுகளுக்கு அதிக காலம்  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 சந்தேகநபர்களையும் குற்றமற்றவர்களாகக் கருதி அவர்களை விடுவிக்க மாவனெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *