
பருத்தித்துறை – கிராமக்கோடு பகுதியில் வீதியால் நடந்து சென்ற போது மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் வீதியால் நடந்து சென்ற முதியவர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.
நேற்று (05) மதியம் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து அவசர நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தது.
அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று (06) காலை 6 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த முதியவர் குறித்து எதுவித தகவல்களும் தெரியாது எனவும் இதுவரை உரியவர்கள் எவரும் வரவில்லை எனவும் தெரிவித்ததுடன் குறித்த முதியவரை அடையாளம் காண உதவுமாறு கேட்டுள்ளனர்.