உள்ளாடைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் குதித்த மாணவர்களால் பரபரப்பு!(வீடியோ இணைப்பு)

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பல்வேறு தொழிற் சங்கங்கள் இணைந்து இன்றையதினம் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கையால் நாடளாவிய ரீதியில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இவவாறான நிலையில் நேற்று முதல் பத்தரமுல்லை – பொல்துவ சந்திக்கு அருகில் நாடாளுமன்றம் செல்லும் வீதியில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸாரால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலிகளுக்கு மேலே கோட்டா கோ கோம் என எழுதப்பட்ட உள்ளாடைகளை தொங்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடியோ இணைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *