மக்கள் பக்கம் நிற்பது யார், அரசாங்கத்துடன் யார் நிற்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியும்

கொழும்பு, மே 06

பிரதி சபாநாயகர் தேர்வு வாக்கெடுப்பில், எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த வேட்பாளரை ஆதரிப்பது மட்டுமே தனது ஒரே இலக்காக இருந்ததே தவிர மொட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளரை ஆதரிப்பது அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

என்றாலும் இறுதியில் நடந்தது சுயேச்சை என்று கூறும் குழுவால் முன்மொழியப்பட்ட வேட்பாளரே மொட்டுவின் வேட்பாளராக மாறியது எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொட்டுவின், பிரதமரைப் பிரதிநிதித்துவப்படுத்தி மொட்டுவின், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மொட்டுவின் ஆதரவைப் பெற்ற ஒரு வேட்பாளருக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

நிபந்தனையின்றி மக்களுடன் முன்நிற்கும் தமது குழுவினரால் ஆடை அணிந்து வன்னம் மக்களுக்கு துரோகம் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும் இறுதி சந்தர்ப்பமாக மக்கள் பக்கம் நிற்பது யார், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் யார் நிற்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *