நாடளாவிய ரீதியில் கோட்டபாய ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் மற்றும் அமைச்சரவை உடனடியாக பதவி விலக கோரியும் 3,000 தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளும் ஹர்த்தால் கதவடைப்பு போராட்டத்திற்கு மன்னார் மக்களும் பூரண ஆதரவு வழங்கியுள்ளனர்
இன்று அதிகாலை தொடக்கம் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதுடன், தனியார் பேரூந்து சேவைகளும் இயங்கவில்லை. அதேநேரம் பொது இடங்களில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவுக்கும் முகமாக கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளது
பாடசாலைகள் வழமை போல் இயங்கிய போதிலும், மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்பட்டது. ஆசிரியர்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வாங்கியுள்ளதுடன், பாடசாலை வருகை பதிவேட்டில் கையெப்பம் இடுவதையும் தவிர்த்துள்ளனர்.
மன்னார் மாவட்ட முழுவதும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கப்பட்ட போதிலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்று கொள்வதற்காக நீண்ட வரிசையில் தொடர்சியாக பொது மக்கள் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

