பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ராஜபக்ஷ அரசாங்கத்தை பதவி விலகுமாறும் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் புத்தளம் மாவட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ராஜபக்ஷ அரசுக்கு எதிராககவும் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


