கர்நாடகா தகவல் தொழில்நுட்ப அமைச்சரை சந்தித்த வடக்கு ஆளுநர் ஜீவன்!

இந்தியா சென்றுள்ள வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கர்நாடக மாநில தொழில்நுட்பம், உயர்கல்வி, அறிவியல் மற்றும் கர்நாடகாவின் தொழில்நுட்பம் டாக்டர் சிஎன் அஷ்வத் நாராயணை நேற்றைய தினம் வியாழக்கிழமை சந்தித்தார்.

வடமாகாணத்தை மையமாக கொண்டு இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பிலும், வடமாகாணத்தில் தற்போதுள்ள கல்வி முறைகளை வலுப்படுத்துதல் மற்றும் சீரமைத்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.

மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்காக வடமாகாணத்தில் இந்திய கல்வி நிறுவனங்களை அமைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *