
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் இன்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய கேதீஸ்வரன், வருடாந்த பணியிட மாற்ற அடிப்படையில், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம் வழங்கப்படும் வரையில், பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.