மூதாட்டியை வெட்டிய கொள்ளைக் கும்பல்! தெல்லிப்பளையில் சம்பவம்

யாழ்.தெல்லிப்பளை பகுதியில் தனிமையில் இருந்த மூதாட்டியிடம் கொள்ளையடிப்பதற்காக வாளால் வெட்டிய சம்பவமொன்று அரங்கேறியுள்ளது.

வெட்டு காயங்களுக்கு உள்ளான மூதாட்டி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தெல்லிப்பளை வித்தக பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியிடம் கொள்ளை இடுவதற்காக மூவர் கொண்ட குழு வீட்டுக்குள் நுழைந்தது.

கொள்ளையர்களை அவதானித்த மூதாட்டி சத்தமிட்ட போது, அவரை வாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *