எதிர்க் கட்சிகள் சராமரியாக கேள்விக்கணை; பாராளுமன்றத்தை ஒத்திவைத்த சபாநாயகர்!

அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் தற்போது தீவிரமடைந்து வருகின்றது.

இதேவேளை இன்றையதினம் காலை10மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் அமர்வு நடைபெற்று வருகின்றது.

அதேவேளை அனைத்து பல்கலைக்கழக மாணவர்களால் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை பாராளுமன்றிலும் ஆளும் மற்றும் எதிர்த் தரப்புக்களிடையே கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

இதேவேளை எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் விவாதம் நடத்த வேண்டும் என கோரியிருந்நத நிலையில் ஆளும் தரப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டது.
இந்நிலையில் சபையினை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *