பாலமுனை வீதிசோதனை சாவடியில் இடம்பெற்ற சம்பவத்தில் 11 பொலிசார் ஒரு ஊடகவியலாளர் உட்பட 16 பேர் படுகாயம்–
(கனகராசா சரவணன்)
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பொலிஸ் வீதிசோதனைச் சாவடியில் நேற்று வியாழக்கிழமை (05) இரவு இடம்பெற்ற பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து பொலிஸ் காவல் அரண் தீக்கிரையாக்கப்பட்டதுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிசார் ஊடகவியலாள் ஒருவர் உட்பட 16 பேர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியிலுள்ள பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடியில் சம்பவதினமான நேற்று இரவு 11.30 மணிக்கு மோட்டர்சைக்கிள் ஒன்றில் தலைகவசம் இன்றி பிரயாணித்த ஒருவரை கடமையில் இருந்து சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட போது வாய்தர்க்கம் மோதலாக உருவாகியதையடுத்து மோட்டர்சைக்கிளை செலுத்தி சென்றவர் காயமடைச்துள்ளார்.
இதனையடுத்து அங்கு ஒன்று கூடிய சுமார் 500 மேற்பட்ட பொதுமக்கள் வீதிச் சோதனை சாவடியை கொட்டிலை தீயிட்டதுடன் சோதனைச் சாவடியை அடித்து சேதப்படுத்தியதையடுத்து அங்கு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிசார் சென்று போது பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து பொலிசார் மீது பொதுமக்கள் தாக்குதல் நடாத்தியதுடன் பொலிசார் ஒருவரின் கழுத்தை நெருத்த நிலையில் அவர் தனது கைதுப்பாக்கியால் துப்பாக்கி சூட்டை நடாத்தியதையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் சிதறி ஓடியதையடுத்து பதற்றம் ஏற்பட்டது
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஊடகவியலாள் ஒருவரை தாக்கியதுடன் அவரின் கமராவை பறித்துச் சென்றுள்ளதாகவும் இதில் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிசார் 11 பேர் உட்பட 16 பேர் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாணாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்லாவின் பணிப்புரைக்கமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.