கொப்பேகடுவை வீதியில் பதற்றம்: பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்

கொழும்பு,மே 06

டென்சில் கொப்பேகடுவை வீதியில் அமைந்துள்ள முச்சந்தி பாலத்திற்கு அருகில் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது சற்று முன்னர் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் அவர்களை அகற்றுவதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையினை தொடர்ந்து அமைதியின்மை ஏற்பட்டது.

இந்நிலையில் ஆர்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருக்கு செல்லாமல் குறித்த பகுதியில் தொடர்ந்தும் ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தங்களது ஆர்பாட்டங்கள் காரணமாக போக்குவரத்திற்கோ அல்லது சமூக அமைதிக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பொலிஸார் கண்ணீர் புகைபிரயோகத்தனை மேற்கொண்டுள்ளதாக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *