இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலை தொடர்பில் கனடா தூதர் கருத்து!

இன்றையதினம்(06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனடா உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் ட்விட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டு,

அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்வது கடினம் என்று கூறுகிறார்.

“கடந்த வாரங்களாக, #SriLanka முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், அமைதியான கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அனுபவிக்கும் குடிமக்களை பெருமளவில் ஈடுபடுத்தியுள்ளன, மேலும் இது நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த பெருமையாகும். அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்வது கடினம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *