இன்று முதல் அவசரகால சட்டம் பிரகடனம்

கொழும்பு,மே 06

நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் நலனை பாதுகாப்பதற்கும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்கும் அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்படுவதாக  ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *