சிங்களத் தலைவரால் நாடு நாசமாக்கப்படுகின்றது! – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

சிங்கள மக்கள் கண்முன்னே இந்த நாட்டை நாசமாக்கும் சிங்கள தலைவர்கள், தமிழர்களுக்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் அரசியல்வாதிகளின் உண்மை நிலையை அறிந்துகொள்ள சிங்கள மக்களுக்கு தற்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது என்றும் அக்கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட ஏதேச்சாதிகாரம் காரணமாகவே நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட்டது என குற்றம் சாட்டினார்.

இதன் காரணமாகவே ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு வீட்டுக்கு செல்லவேண்டும் என மக்கள் கோருவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட பின்னர் அடுத்த கட்டமாக என்ன செய்வதென்ற நிலைப்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தி அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *