போதைப் பொருட்களுடன் நால்வர் கைது

நாடளாவிய ரீதியில் பொலிஸார் நேற்று மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது, போதைப் பொருட்களுடன் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனை பொலிஸ் தலைமையகம் இன்று (7) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக கொழும்பு ஜம்பட்டா வீதி, நீர்கொழுபு, அளுத்கம, பொரளை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில், 35 கிராம் ஹெரோய்ன், 5 கிராம் 50 மில்லிகிராம் கேரள கஞ்சா என்பவற்றுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த 29, 39, 53, 43 ஆகிய வயதுகளையுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது போதைப் பொருள் விற்பனையினூடாக பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் 5,660,300 ரூபாய் பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, அம்பாறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பாறை நகரத்தில் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இரண்டு கஜ முத்துக்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹொரண, தெல்விட்ட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25, 40 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *