இலங்கையிலிருந்து தமிழகம் தப்பிச் சென்ற ஜோடிக்கு நேர்ந்த ஏமாற்றம்! படகோட்டி தலைமறைவு

இலங்கையில் இருந்து தமிழகம் தப்பிச் சென்ற இருவரை இந்தியா எனக்கூறி நடுக்கடலில் இறக்கி விடப்பட்ட சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது.

இச் சம்பவத்தில் தொடர்புடைய இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் தெரியவருகையில்,

மன்னாரில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்ற இருவரை ஏற்றிச் சென்ற படகோட்டி ஒருவர், இந்தியாவின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் எனத் தெரிவித்து, நேற்று அதிகாலை இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள 7வது தீடையில் அவர்களை இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

இவ்வாறு இறக்கிவிடப்பட்டவர்களை இந்திய மீனவர்கள் அவதானித்து இந்திய கரையோர காவல்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து இந்திய எல்லைவரை தேடிய இந்திய அதிகாரிகள், அவ்வாறு நிற்பவர்கள் இந்தியாவின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் எவரும் இல்லை என உறுதி செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து, மாலை 4 மணியளவில் இலங்கை கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர், 7வது தீடையில் நின்ற ஆண், பெண் இருவரையும் கைது செய்து தலை மன்னாருக்கு அழைத்து வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *