நாட்டின் பொருளாதாரம் மோசமாக செல்கிறது: அநுரகுமார திசாநாயக்க

கொழும்பு,மே 08

நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தகூடிய அனைத்து அழிவுகளையும் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீண்டகாலமாக எமது நாட்டை ஆட்சி செய்தவர்கள் எமது பொருளாதாரத்திற்கு எவ்வாறான அழிவுகளை ஏற்படுத்த முடியுமே அனைத்து அழிவுகளையும் ஏற்படுத்தியுள்ளனர்.

நான்கு ஐந்து மணித்தியாலங்கள் மின்விநியோகத்தடை, எரிபொருள் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் இரண்டு மூன்று கிலோமீற்றர்களுக்கு தடை, சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொள்ளாத முடியாத நிலை, ஆகியன பொருளாதார அழிவிற்கு சிறந்த உதாரணங்களாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சர் எங்களிடம் 50 மில்லியன் மாத்திரமே வெளிநாட்டு நிதி கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கின்றார்.

ஆனால் வலுசக்தி அமைச்சர் மாதாந்தம் எரிபொருள் கொள்வனவிற்கான 550 மில்லியன் டொலர்கள் தேவை என்கின்றார்.

இதனை அடிப்படையாகொண்டு நோக்கினால் எமது பொருளாதாரத்தின் நிலைமையை கணித்துக்கொள்ள முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *