
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளான எமக்கு இன்றைய தினம் அன்னையர் தினம் அல்ல,
எங்கள் பிள்ளைகளுக்கு எப்பொழுது அநீதி நடந்ததோ, எங்கள் பிள்ளைகளை எப்பொழுது சிதைத்தார்களோ, குண்டு மழை பொழிந்து பிள்ளைகளையும், கணவர்மார்களையும் எப்போது இழக்க செய்தார்களோ அன்றிலிருந்தே எமக்கு அன்னையர் தினம் இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிலிருந்து தாய் ஒருவர் தெரிவித்தார்.
சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுக்கு எந்த நாளுமே கறுப்புத் தினம்தான். 13 வருட காலமாகவே நாங்கள் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடிக்கொண்டே இருக்கின்றோம். இந்த நிலையில் நல்ல ஆடை அணிந்து கோவிலுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளோம்.
எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது?, எங்கள் பிள்ளைகளின் உயிரை தருவது, தொடர்பில் நீதி வாங்கினால் மட்டுமே சந்தோஷமான அன்னையர் தினத்தை கொண்டாட முடியும்.
கொழும்பில் போராட்டங்கள் இடம்பெற்று கொண்டிருக்கும் வேளையிலும், தமிழருக்கு உரிய எவ்வித சுதந்திரமும் காணப்பட்டவில்லை.
எங்கள் மண்ணில் நினைவுகூருவதற்கு தடைகள் விதிக்கப்படுகிறது, ஒரு விளக்கு ஏற்றி வைக்க கூட முடியாத நிலையில் உள்ளோம். நினைவுகூரும் நாள் வருகையில் தடை சட்டங்கள் விதிக்கப்படுகிறது. எங்களுக்கு மனம் திடம் பெற கண்ணீர் விட்டு, விளக்கு ஏற்றவும் விடுகிறார்களா?.
நாங்கள் தமிழர் சிறுபான்மையாக இருந்தாலும், பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகள் தான். ஆனால் எங்களுக்கு ஒரு தீர்வு கிடைத்தால் மட்டுமே இந்த அன்னையர் தினத்தை ஒன்று சேர்த்து கொண்டாடுவோம். என ஆதங்கத்துடன் கண்ணிர் மல்க வெளிப்படுத்திக் கொள்கிறோம்.- என்றார்.