மக்களுக்கு எரிபொருள் வினியோகம்!
கரைச்சி வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக மக்களுக்கான எரிபொருள் வினியோகம் இன்றைய தினம் 08.05.2022நடைபெற்று வருகிறது
கண்டாவளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திலும் மற்றும் தர்மபுரம் கரைச்சி வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கிளையிலும் மக்களுக்கான எரிபொருள் குடும்பபங்கு அட்டைக்கு மூன்று லிற்றர் வீதம் வழங்கப்படுவதாக கரைச்சி வடக்கு நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தொடர்ச்சியாக தமது கிளைகளை மண்ணெண்ணெய் வினியோகம் நடைபெற்று வருவதாகவும் மண்ணெணை பெற விரும்பும் மக்கள் குடும்ப பங்கிட்டு அட்டையுடன் தமது பகுதியிலுள்ள கிளை முகாமையாளரினைத் தொடர்பு கொள்ளுமாறு பல நோக்குக் கூட்டுறவுச் சங்க முகாமையாளர் தெரிவித்துள்ளார்.