
இலங்கையின் தென்பகுதி கடலில் இருந்து 630 கடல்மைல் தொலைவில் 240 கிலோ கிராம் நிறைக்கொண்ட ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது 7 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடற்படையினரும் போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து நடத்திய நடவடிக்கையின்போதே இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் கூறியுள்ளார்.