யாழ். மாநகர முதல்வர் தியாகி திலீபனுக்கு அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் நினைவு நாளான இன்று, யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரதியேக இடம் ஒன்றில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, 12 நாட்கள் வரையில் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை ஈகம் செய்த மாவீரன் திலீபனின் 34 ஆவது நினைவேந்தல் நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், பொலிஸாரின் கெடுபிடிகளையும் தடைகளையும் மீறி தியாகி திலீபனுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *