
மக்களின் வாழ்க்கை முறையும் பொருளாதாரமும் மீளமைக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசுகையில்,
தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் பாவனையை மூன்றில் ஒரு பங்காக குறைப்பதற்கான திட்டம் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் என்றார்.
குறுகிய கால நடவடிக்கையாக, வாழ்க்கை முறைகளை மீளமைக்கப்பட வேண்டும், தற்போது மக்களின் வாழ்க்கை முறைகள் பொருளாதார சவால்களுக்கு ஏற்றதாக இல்லை.
உதாரணமாக, மந்த நிலையைச் சமாளிக்க கிரீஸுக்கு 12 ஆண்டுகள் தேவைப்பட்டது. இதனால் அந்நாட்டில் ஒரு நபருக்கு தினசரி செலவு விகிதம் 12 யூரோக்கள் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இது போன்று பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கையும் ஓரிரு வருடங்களுக்கு சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.