ரணிலுக்கு ஜனாதிபதி பதவி வழங்கப்பட வேண்டும்-பாலித கோரிக்கை.

தற்போதைய நிலையில் நாட்டைக் கட்டியெழுப்ப முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி பதவி வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் இந்த தருணத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசியலமைப்பை திருத்தவோ அல்லது தேர்தலை நடத்தவோ முயற்சித்தால் அவர்கள் பைத்தியக்காரர்கள் எனவும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

அதேவேளை பெருவிரலில் இருந்து தலை உச்சி வரை செல்வது எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் முட்டாள்தனம் மட்டுமே இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *