
குலோத்துங்க சோழர் காலத்திற்குரியதாக நம்பப்படும் மிகவும் தொன்மையான சிலைகள் நாகையில் மீட்பு!
தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள தேவபுரீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கிருந்து மிகவும் தொன்மையான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தைத் தோண்டும் போது அதிகளவிலான ஐம்பொன் சிலைகளும் பூஜைப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சிலைகள் குலோத்துங்க சோழர் காலத்திற்குரியவை என நம்பப்படுகிறது.

